2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

குளவி கொட்டியதில் 12 பேர் பாதிப்பு

Freelancer   / 2023 மே 24 , மு.ப. 08:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.பிரபா 

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட என்பீல்ட் தோட்டத்தின் பார்கெந்தல் பிரிவில் குளவி கொட்டுக்கு இலக்கான 8 பேர் தொடர்ந்தும் டிக்கோயா-கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பார்கெந்தல் தோட்டத்தில் தேயிலை மலையில் கொழுந்து பறிந்துக் கொண்டிருந்த 9 ஆண்களும் 2 பெண்களும் இதில் பாதிக்கப்பட்டதுடன், பாதையில் சென்றுக் கொண்டிருந்த முன்பள்ளி ஆசிரியை ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளார்.

இவர்கள் 12 பேரும் உடனடியாக டிக்கோயா-கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், இவர்களில் 3 பெண்களும் ஆண்ணொருவரும்சிகிச்சையின் பின்னர் நேற்று (23) மாலை வீடு திரும்பிய நிலையில் 7 பெண்களும் ஆண்ணொருவரும் தொடர்ந்தும் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருவதாக  ஆதார வைத்தியாசாலை கடமை நேர வைத்தியர் தெரிவித்தார்.

இந்த 8 பேரின் நிலை ஆபத்தானதாக இல்லை என்றும் அவர்கள் இன்று அல்லது நாளை வீடு திரும்ப கூடும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .