2025 ஜூலை 23, புதன்கிழமை

குளவி கொட்டில் 38 பேர் பாதிப்பு

Kogilavani   / 2017 ஓகஸ்ட் 02 , பி.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சதிஸ், மு.இராமச்சந்திரன்

பொகவந்தலாவை, கொ்க்கஸ்வோல்ட் மத்திய  பிரிவு தோட்டத்தில், ஆசிரியை உட்பட 38 பேர்,  குளவி  கொட்டுக்கு இலக்கான நிலையில்,  பொகவந்தலாவை வைத்தியசாலையில்,  இன்று மாலை அனுமதிக்கப்பட்டதாக, பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.

தேயிலை மலையில் கொழுந்து பறித்திக்கொண்டிருந்த பெண் தொழிலாளர்கள் உட்பட 38 பேரே,  குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

இவர்களில் எட்டு பெண் தொழிலாளர்கள் சிகிச்சையின் பின்னர் வீடுத்  திரும்பியுள்ளதாகவும் ஆசிரியர் உள்ளடங்களாக 30 பேர், வைத்தியசாலையில் தொடர்ந்து தங்கியிருந்து சிகிச்சைப் பெற்றுவருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .