2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

கைதாக ஐவருக்கும் பொலிஸ் பிணை

Editorial   / 2020 மே 04 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

ஊரடங்கு அமலில் இருக்கும் போது, பொலிஸாரின் அனுமதிப் பத்திரம் இன்றி சிவனொளிபாதமலைக்கு வந்த அக்குரஸ்ஸ பிரதேச சபைத் தவிசாளர் உட்பட ஐவரும், நேற்று (03) பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், இந்த ஐந்து பேரையும் நாளை மறுதினம் (06), ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் பொலிஸார் உத்தரவிட்டுள்ளனர்.

அக்குரஸ்ஸ பிரதேச சபைக்கு உரித்தான லொறியொன்றில் பயணப் பொதிகளுடன், அக்குரஸ்ஸையிருந்து வந்திருந்த இந்த ஐந்துபேரையும், நல்லதண்ணி பொலிஸார் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .