Editorial / 2019 டிசெம்பர் 11 , பி.ப. 06:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிவாணி ஸ்ரீ
காவத்தை- அவுப்பை தலுகலை தோட்டத்தில், கொலை செய்யப்பட்ட நிலையில் பெண்ணொருவரின் சடலத்தைக் காவத்தைப் பொலிஸார் மீட்டுள்ளனர்.
இச்சம்பவம் நேற்று முன்தினம்(9) இரவு இடம்பெற்றுள்ளது. பனாவென்ன - கெதரவில் வசித்து வந்த யக்தேஹிகே சுமானாவதி (67) என்ற மூன்று பிள்ளைகளின் தாயாரே, இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேற்படி பெண்ணின் வீட்டிலிருந்து, யாரோ தன்னைக் கொலை செய்ய முயலுவதாக மரண ஓலம் கேட்டதாகவும் இதையடுத்து மேற்படி பெணின் வீட்டுக்குச் சென்று பார்த்தபோது, அந்த பெண் இரத்த வெள்ளத்தில் கிடந்ததைக் கண்டதாக, அயலவர்கள் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர் என்றும் தெரியவருகிறது.
சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
27 minute ago
34 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
34 minute ago
2 hours ago
2 hours ago