2025 ஜூன் 23, திங்கட்கிழமை

சிறுத்தைகள் சீறுவதாக அச்சம்

Kogilavani   / 2015 செப்டெம்பர் 03 , மு.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியா மாவட்டத்தில் காடுகளை அண்டிய தோட்டப்பகுதிகளில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளமையால், பிரதேசவாசிகளும் தோட்டத் தொழிலாளர்களும் அச்சமடைதுள்ளனர்.

நுவரெலியா மாவட்டத்தில் புசல்வாவை, பொகவந்தலாவை, ஹட்டன், மஸ்கெலியா போன்ற பகுதிகளிலுள்ள காடுகளை அண்டிய தோட்டப்பகுதிகளிலேயே சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.   

தேயிலைச் செடிகளுக்குள் சிறுத்தைகள் பதுங்கியிருப்பதால் தாம் அச்சத்தின் மத்தியிலே தொழிலில் ஈடுபடுவதாக  தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

தோட்டப்பகுதிகளில் ஏற்கெனவே குளவிகளின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், சிறுத்தைகளின் நடமாட்டம் மற்றும் அவற்றின் தாக்குதல் காரணமாக தொழிலுக்கு செல்வதற்கு தொழிலாளர்கள் அஞ்சுகின்றனர்.

இதுகுறித்து வனஜீவராசிகள் திணைக்களமும் தோட்ட நிர்வாகங்களும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .