2026 ஏப்ரல் 21, செவ்வாய்க்கிழமை

சிறுமியை வன்புணர்ந்த சிறுவன் கைது

Niroshini   / 2016 செப்டெம்பர் 10 , மு.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுஜிதா 

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  ஹொலிரூட் தோட்டத்தில் 4 1/2 வயது சிறுமி ஒருவரை துஷ்பிரயோகம் செய்த 13 வயது சிறுவனை, நுவரெலியா மாவட்ட நீதவான் முன்னிலையில் இன்று  ஆஜர்படுத்தவுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

சில தினங்களுக்கு முன் 4 1/2 வயது சிறுமி ஒருவரை துஷ்பிரயோகம் செய்த குறித்த சிறுவன், தலைமறைவாகியிருந்த நிலையில் தலவாக்கலை பொலிஸாரால், நேற்று மாலை கைது செய்யப்பட்டான்.

பாலியல் தொடர்பான ஆபாச காட்சிகளையும் படங்களையும் பார்த்ததன் விளைவாகவே இச்சம்பவம் நேர்ந்துள்ளதாக ஆரம்பக் கட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமி, நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .