Editorial / 2020 ஏப்ரல் 20 , பி.ப. 12:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.ஏ.எம்.பாயிஸ்
இரத்தினபுரி காவத்தை பொலிஸ் நிலையத்திலிருந்து, சந்தேக நபரொருவர் தப்பி ஓடியதையடுத்து, பொலிஸ் நிலையத்தில் சேவையில் இருந்த இரு பொலிஸ் அதிகாரிகள், நேற்று (19) முதல் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
நபரொருவரின் அலைபேசியை திருடிய குற்றச்சாட்டில், சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்துள்ளார்.
அந்நபரை, விளக்கமறியில் வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தபோது, அவர் தப்பி ஓடியுள்ளதாக, விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த நபர், தப்பி ஓடிய வேளையில் பொலிஸ் நிலையத்தில் கடமையியிலிருந்த உப பொலிஸ் அதிகாரியும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருமே, கடமையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
5 hours ago
7 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
8 hours ago
9 hours ago