Freelancer / 2025 பெப்ரவரி 11 , பி.ப. 01:34 - 0 - {{hitsCtrl.values.hits}}

இரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங்கள் இணைந்த சப்ரகமுவ மாகாண ஐயப்ப ஒன்றியத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு இரத்தினபுரி இரத்தினேஸ்வரம் ஆலய கலாசார மண்டபத்தில் நாளை (12) இடம்பெறவுள்ளது.
சப்ரகமுவ மாகாணத்தைச் சேர்ந்த ஐயப்ப சுவாமிமாரை ஒன்றிணைக்கும் வகையில் இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது.
இதன்போது சப்ரகமுவ மாகாண ஐயப்ப சுவாமிமாருக்கான உறுதிமொழி எடுத்துக்கொள்ளல், அமைப்பின் நோக்கங்களை வெளியிடுதல் ஆகியனவும் இடம்பெறவுள்ளன.
மேலும், சப்ரகமுவ மாகாண ஐயப்ப ஒன்றியத்துக்கான உத்தியோகபூர்வ இணையத்தளமும் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்படவுள்ளது.
இந்நிகழ்வில் இலங்கையில் உள்ள மூத்த குருசுவாமிமார்கள், சப்ரகமுவ மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சுவாமிமார்கள், இரத்தினேஸ்வரம் ஆலய நிர்வாக சபையினர், பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள், நலன்விரும்பிகள் உள்ளிட்டோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
5 minute ago
11 minute ago
22 minute ago
23 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
11 minute ago
22 minute ago
23 minute ago