2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

சம்பள உயர்வு பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு

Niroshini   / 2020 டிசெம்பர் 31 , பி.ப. 03:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

-ஆ.ரமேஸ்

 

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் 1,000 ரூபாய் உள்ளடங்கிய சம்பள உயர்வு பேச்சுவார்த்தை, ஜனவரி 7ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

தோட்டத் தொழிலாளர்களுக்கான நலன்புரி திட்டங்கள், கூட்டு ஒப்பந்தத்தில் திருத்தம் தொடர்பில் இடம்பெற்றிருந்த  பேச்சுவார்த்தை, இன்று (31) வரை ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இருப்பினும், கண்டியில், கடந்த 17ஆம் திகதியன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்த அக்கரப்பத்தனை பிரதேச சபை தவிசாளருக்கு, கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, அந்நிகழ்வில் கலந்துகொண்ட இ.தொ.கா பொதுச் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட பல அரசியல் பிரமுகர்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டனர்.

இவர்களுக்கான பிசிஆர் பரிசோதனை மேற்கொண்ட போது, ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட சிலரது அறிக்கைககள் வெளியானதுடன், மேலும் சிலரின் பிசிஆர் அஙிக்கைகள் இன்னும் வெளியாகவில்லை.

இந்நிலையில், வியாழக்கிழமை (31) இடம்பெறவிருந்த  சம்பள பேச்சுவார்த்தையில், தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை  மீறி கலந்துகொள்ள மாட்டோமெனத் தெரிவித்து, பேச்சுவார்த்தையில் இருந்து இ.தொ.கா விலக்கியிருந்தது.

இதையடுத்து, பேச்சுவார்த்தையில் இ.தொ.கா கலந்துகொள்வது  கேள்விக்குறியாக இருந்து வந்த நிலையில், குறித்த  பேச்சுவார்த்தை, ஜனவரி  7ஆம் திகதிக்கு  ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக,  இ.தொ.கா ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X