2025 மே 08, வியாழக்கிழமை

சிறுமியை துஷ்பிரயோகம் செய்த 'அலுப்புநாத்தி’

Editorial   / 2023 செப்டெம்பர் 07 , பி.ப. 01:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

15 வயதான சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபர்,   பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது  சட்டை பின்கள் இரண்டை (அலுப்புநாத்தி ) விழுங்கியுள்ளார்.

இந்த சம்பவம் பொத்துப்பிட்டிய பொலிஸ் நிலையத்திலேயே இடம்பெற்றுள்ளது. சட்டை பின்கள் இரண்டை விழுங்கி நபர், இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

​தன்னுடைய தவறான மனைவியின் மகளை, துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் இரு தரப்பினரையும் பொலிஸ் நிலையத்துக்கு புதன்கிழமை (06) அழைத்து பொலிஸார் விசாரித்துள்ளனர்.

முறைப்பாட்டை விசாரணைக்கு உட்படுத்திக்கொண்டிருந்த போதே சந்தேகநபர் இவ்வாறு சட்டை பின்களை விழுங்கியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X