R.Maheshwary / 2022 ஜனவரி 04 , பி.ப. 05:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
அக்கரபத்தனை நகரில் உள்ள சித்தி விநாயகர் கோவிலின் சிலை உடைப்பு சம்பவம் தொடர்பில், கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களை இந்த மாதம் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜீ.ஜீ.பி.ஜயசிங்க (03) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில், காரைநகர் பிரதேசத்தை சேர்ந்த நால்வர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட நால்வரும் இக்கோவிலின் நிர்மாண பணிகளில் ஈடுபட்டவர்கள் என தெரியவந்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .