2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

ட்ரோன் கெமரா விவகாரம்: சீன பிரஜைகள் மூவருக்கு அபராதம்

Editorial   / 2019 மார்ச் 27 , மு.ப. 01:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

ட்ரோன் கெமராவைப் பயன்படுத்தி, சட்டவிரோதமாக ஹோட்டன் வனாந்தரத்தை ஒளிப்பதிவு செய்தனர் என்று குற்றஞ்சாட்டப்பட்ட சீன பிரஜைகள் மூவருக்கு, நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் பிரமோத ஜயசேகர, தலா 25,000 ரூபாய் அபராதம் விதித்து, நேற்று (26) உத்தரவிட்டார்.  

ஹோட்டன் பிரதேசத்துக்கு சுற்றுலா மேற்கொண்டிருந்த மேற்படி மூவரும், ஹோட்டன் நிர்வாகத்துக்கு அறிவிக்காமல், ட்ரோன் கமெராவைப் பயன்படுத்தி, ஹோர்ட்டன் வனத்தை ஒளிப்பதிவு செய்த போது, வனாந்தரத்தின் அதிகாரிளால் நேற்று முன்தினம் (25) கைதுசெய்யப்பட்டனர். அத்துடன், ட்ரோன் கமெராவும் பறிமுதல் செய்யப்பட்டது. 

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X