Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Kogilavani / 2015 ஒக்டோபர் 16 , மு.ப. 09:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சிவாணி ஸ்ரீ
'எதிர்வரும் அனைத்து தேர்தல்களிலும், தொகுதிக்கு பொறுப்புகூறும் மக்கள் பிரதிநிதி ஒருவரை தெரிவு செய்வதே அரசாங்கத்தின் நோக்கமென மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்தார்.
சப்ரகமுவ மாகாணத்தின் இரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங்களில் உள்ள உள்ளூராட்சி சபைகளின் அபிவிருத்திக்குழு கூட்டம் நேற்று(15), சப்ரகமுவ மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை கூறினார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
உள்ளூராட்சி நிறுவனங்களின் தேர்தல் விதிமுறைகளுக்கமைய உள்ளூராட்சி சபைகளின் தேர்தல் முறைகள் மாற்றப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டு அதன் ஊடாக பிரச்சினைகளை குறைப்பதற்கு நடவடிக்ககை எடுக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி சபை தேர்தல் இன்னும் நடத்தப்பட வில்லை என்று பல்வேறு தரப்பினர்கள் குறைகூறி வருகின்றார்கள். தேர்தல் முறை மாற்றப்பட்டுள்ளதால் அது குறித்து சரியான முடிவு எடுப்பதற்கு சிலகாலங்கள் தேவைபடுகின்றது. இருந்தாலும் அரசினதும் அமைச்சினதும் தாமதமின்றி உள்ளுராட்சி சபை தேர்தலை விரைவில் நடாத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தல் 70 வீதம் தொகுதிவாரியாகவும் 30 வீதம் விகிதாசார முறையிலும் நடத்தப்படவுள்ளது.
மேற்படி 9 மாகாணங்களிலும் உள்ள உள்ளுராட்சி சபைகளை சிறந்த முறையில் அபிவிருத்தி செய்து மக்களுக்கு சிறந்த சேவையை பெற்று கொடுக்கும் நோக்குடனே நாம் செயற்பட்டு வருகின்றோம். இதற்கு அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்' என அவர் மேலும் கூறினார்.
இதன்போது உரையாற்றிய மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் பிரதி அமைச்சர் கருணாரத்ன பரணவிதான,
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சின் மூலமாக உள்ளுராட்சி சபைகளை அபிவிருத்தி செய்வதற்கு விசேட வேலைத்திட்டங்களை நடைமுறைபடுத்தியுள்ளோம்.
ஜனாதிபதி மற்றும் பிரதமரின் வேண்டுகோளுக்கமைய எதிர்வரும் 5 ஆண்டுகளுக்குள் உள்ளூராட்சி சபைகளை முழுமையாக அபிவிருத்தி செய்யப்பட உள்ளது.
இலங்கையில் உள்ள ஒன்பது மாகாணங்களிலும் உள்ள உள்ளூராட்சி சபைகளில் அபிவிருத்திகுழு கூட்டத்தை நடத்தி அதன்மூலம் உள்ளூராட்சி சபைகளில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை கண்டறிந்து அவற்றுக்கு தீர்வு கண்டு உள்ளூராட்சி சபைகளை முழுமையாக அபிவிருத்தி செய்யவதற்கு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா நடவடிக்கை எடுத்துள்ளார்.
உள்ளூராட்சி சபை தேர்தலில் மாற்றங்கள் ஏற்பட உள்ளது. அதற்கு நாம் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அத்தோடு நான் இரத்தினபுரி மாவட்டத்தின் மக்கள் பிரதிநிதி என்ற வகையில் சப்ரகமுவ மாகாணத்துக்கு கூடுதலான சேவைகளை செய்வதற்கு எதிர்ப்பார்க்கின்றேன். அதற்கு இம்மாகாணத்தில் உள்ள அமைச்சர்கள் உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
34 minute ago
39 minute ago