2026 ஏப்ரல் 09, வியாழக்கிழமை

தேனுக்கு தட்டுப்பாடு

Princiya Dixci   / 2016 ஜூன் 14 , மு.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

- இந்திக அருண் குமார

மத்திய மாகாணத்தில் தேனுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக ஆயுர்தேவ வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

பல்வேறு நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுத்தும் குறித்த தேனுக்கு தற்போது பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது எனக் கூறியுள்ளனர்.

மேலும்,தேன் சேகரிப்பதற்கு ஒரு குழு உள்ளதாகவும் இதன் போது கூறினர்.

முன்னர் நாவுல பிரதேசத்துக்குட்பட்ட  அபன, கபுருவப் பகுதியிலுள்ள லக்கல காட்டுப்பகுதியியே தேன் சேகரித்து வந்தனர். தற்போது காடுகளில் தேன் இல்லை எனத் தெரிவிக்கின்றனர்.

இங்கு காடுகள் அழிப்படுவதனால்,பூக்களைக் காணமுடியாத நிலைமை காணப்படுவதாகவும் தெரிவிக்கிறனர்.

இதனால் மாத்தளைப் பகுதியில் தேன் மிகக் குறைவாக சந்தைக்கு வருவதனால் ஒரு போத்தில் 1,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகத் தெரித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .