R.Tharaniya / 2025 மார்ச் 24 , பி.ப. 06:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ் முற்போக்குகூட்டணியின் உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான முதலாவது பிரச்சார கூட்டம் கொட்டகலையில்இடம்பெற்றது.
இதில் கலந்துக் கொண்ட தொழிலாளர்தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனிதிகாம்பரம் இவ்வாறு தெரிவித்தார் போலி வாக்குறுதிகளைவழங்கியே தேசிய மக்கள் சக்தி வாக்குகளைப் பறித்துள்ளது. எனவே, இம்முறை 'உள்ளூராட்சி சபைத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணி அணியே வெற்றி பெறும்என்று தெரிவித்தார்.,ஐ.எம்.எப் விதிகள்மாற்றப்படும் என்றனர், அரிசி மாபியா நிறுத்தப்படும், இறக்குமதி செய்யப்பட மாட்டாதுஎன்றும் கூறினார்.
ஆனால் அது நடக்கவில்லை. மறுபுறத்தில் அபிவிருத்தி திட்டங்களும் இடம்பெறவில்லை.மலையகத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் பெரும் பகுதி இந்திய நிதியாகும்.நாளுக்கு நாள்பொருட்களின் விலைகள் எகிறி வருகின்றன. தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளம் இல்லை.வரவு- செலவுத் திட்டகூட்டத் தொடரின் இறுதி நாளன்று ஜனாதிபதி நீண்ட நேரம் உரையாற்றினார். ஆனால் தோட்டத்தொழிலாளர்களின் சம்பளம் பற்றி எதுவும் கூறவில்லை." - என்றார்.


எஸ்.கணேசன்
14 minute ago
32 minute ago
49 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
32 minute ago
49 minute ago
1 hours ago