2025 ஜூன் 23, திங்கட்கிழமை

தகாத உறவு கொண்ட நபர்: இருவருக்கு விளக்கமறியல்

Kogilavani   / 2015 செப்டெம்பர் 04 , மு.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.செல்வராஜா

மொனராகலை இந்தகட்டுவ எனும் பகுதியில், பெண்ணொருவருடன் தகாத உறவு வைத்திருந்த நபரொருவரை கூரிய ஆயுதங்களால் வெட்டிக் கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு மொனராகலை நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த பகுதியைச் சேர்ந்த டி.எம்.விஜேசேகர (வயது 50) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலை செய்யப்பட்டவரின் மகன் உறவு முறையிலுள்ள இருவரே பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .