2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

தனிமைப்படுத்தப்பட்ட சென்கூம்ஸ் விடுவிக்கப்பட்டது

R.Maheshwary   / 2021 ஜூன் 08 , பி.ப. 03:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

துவாரக்ஷான்

கொரோனா தொற்று  பரவல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட நுவரெலியா மாவட்டத்தின் லிந்துலை பொது சுகாதார பிரிவுக்குட்பட்ட     சென்கூம்ஸ் தோட்டம்,  இன்று (8)  காலை முதல் விடுவிக்கப்பட்டுள்ளது.

மே மாதம் 06 ஆம் திகதி   குறித்த தோட்டத்தில்  25 க்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதையடுத்து  சுமார்  700க்கும் மேற்பட்ட மக்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

எனினும் தற்போது எவருக்கும் தொற்று ஏற்படாத நிலையில்,  இப்பிரதேசத்தை விடுவிக்க கொரோனா  தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு நிலையம் நடவடிக்கை எடுத்ததன் காரணமாக இன்று முதல் இத்தோட்டம்  விடுவிக்கப்பட்டதாக  லிந்துலை பொது சுகாதார வைத்திய அதிகாரி ஆறுமுகம் ஜெயராஜன் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .