Editorial / 2020 பெப்ரவரி 12 , பி.ப. 05:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.ஏ.எம்.ஹசனார்
பதுளை மாவட்டத்தில் தமிழர்களின் தனித்துவத்தைப் பாதுகாத்து, தன்மானமிக்க தமிழ்ப் பரம்பரையினரை உருவாக்குவதற்காகவே, தமிழர் புரட்சிப் பேரவை அமைக்கப்பட்டது என, பேரவையின் தலைவர் பத்மநாதன் தெரிவித்தார்.
ஹாலி-எலயில், இன்று (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
முதலாளித்துவத்துக்குக் கீழ் இருக்கும் தோட்டத் தொழிலாளர்களை, அடிமை சாசனத்தில் இருந்துமீட்டு எடுப்பதே, தங்களது பிரதான நோக்கம் என்றும் அவர் கூறினார்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட தமிழ் புரட்சிப் பேரவையின் மூலம், பதுளை, பசறை, ஹால-எல போன்ற பிரதேச சபைகளில், மூன்று உறுப்பினர்களை பெற்றுக்கொண்டதாகவும் எனவே, தங்களது தோட்ட மக்களின் இன்னோரன்னத் தேவைகளை அறிந்து, அனைத்துத் தேர்தலிலும் பேரவை களமிறங்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.
2 hours ago
2 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
4 hours ago
4 hours ago