2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

’தற்போதைய அரசாங்கத்தின் 7 பேர்ச் திட்டம் சரியில்லை’

Editorial   / 2019 செப்டெம்பர் 19 , மு.ப. 10:06 - 1     - {{hitsCtrl.values.hits}}

 

க.கமல்

தற்போதைய அரசாங்கம் மலையக மக்களுக்க வழங்கியுள்ள வீட்டுத்திட்டம் மக்களுக்கு பயனுடையதாக இல்லையென தெரிவிக்கும் நுவரெலியா மாநகரசபை உறுப்பினர் சிவரஞ்சனி சிவகுமாரன், மலையக மக்களுக்கு சொந்த வீட்டுடன் 20 பேர்ச்சஸ் காணியும் வழங்கப்பட வேண்டுமென கோரினார்.

அடுத்த முறை பொதுஜன பெரமுன ஆட்சியமைக்கும் பட்சத்தில் உயர் மட்டத்தினருடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி அந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார். 

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு மேலும் கருத்துரைத்த அவர், 

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது மலையக மக்களை ஏமாற்றியே தற்போதைய ஆ​ட்சியாளர்கள் வாக்குகளை பெற்றுக்கொண்டனர் எனவும், இன்றளவிலும் மக்களை  ஏமாற்றிக்கொண்டிருக்கும் ஆட்சியாளர்களால் மலையகத்தில் கட்டிக்கொடுக்கும் வீடுகள் தரம் குறைந்த பொருள்களை கொண்டு கட்டப்பட்டவை எனவும் சாடினார். 

அதேபோல், 1,000 ரூபாய் சம்பள அதிகரிப்பை தோட்ட தொழிலாளர்களுக்கு பெற்றுகொடுப்பதாக கூறியதும் போலியான வாக்குறுதியாக மாறிவிட்டதெனவும்,  மலையகத்தில் உள்ள தேயிலை தோட்டங்கள் திட்டமிட்ட வகையில் காடுகளாக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். 

அதே​போல், வா​ழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு வெளிநாடுகளுக்கு செல்லும் பெண்களில் குடும்பங்கள் சமூக சீரழிவுகளுக்கு முகம்கொடுத்து வருவதாகவும், வெளிநாடு செல்லும் மலையக பெண்களுக்கு எந்தவொரு பாதுகாப்பும் வழங்கப்படுவதில்லை எனவும் சாடினார். 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் மலையகத்தின் வீதிகள் உள்ளிட்ட அடித்தள கட்டமைப்புகள் விஸ்தரிக்கப்பட்டதாக தெரிவித்த அவர், யுத்தம் நிறைவு செய்யப்பட்டதாலேயே மலையக மக்களும் சுதந்திரமாக எல்லா பகுதிகளுக்கும் சென்று வர முடிவதாகவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 1

  • சத்தியப்பிரகாஷ் Thursday, 19 September 2019 09:38 AM

    வீடு தேவை மலையகத்தில் தோட்ட மக்களுக்கு மாத்திரம் இல்லை மலையகத்தில் பெரும்பாலான குடும்பங்கள் வீடு இல்லாமல் கொட்டில்கல் அமைத்தும் வாடகை வீடுகளிளும் தான் வாழ்கின்றனர் தோட்டத்தில் உள்ள லயங்களை உடைத்துவிட்டு அதே தோட்டத்தில் அதே லயம் காம்பிராவை நான்கு சிவர்களால் மறைத்து கொடுப்பதில் எந்த அர்த்தமும் இல்லை வீடு இல்லாதவன் வீடு இல்லாமலே தான் இருப்பான் இந்த வீட்டுத்திட்டம் தமது கட்சி ஆதரவாளர்களுக்காக மாத்திரமே கட்டி கொடுக்கப்பட்டுள்ளதாக ஓர் புகார் உள்ளது சிலருக்கு ஒறே வீட்டு திட்டத்தில் ஒன்றுக்கு இரண்டு வீடுகளும் கொடுக்கப்பட்டிருக்கின்றன இந்த வீடுகள் சரியான முறையில் கட்டப்பட வில்லை என்பதை நாம் ஏற்று கொள்ளத்தான் வேண்டும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .