2025 ஜூன் 28, சனிக்கிழமை

தலவாக்கலை நகர சபையை கைப்பற்றிய தே.ம.ச

Janu   / 2025 ஜூன் 18 , பி.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

தலவாக்கலை, லிந்துலை நகர சபையின் தலைவராக தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்  மலிதுவ லியனகே உப்பாலி தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் உப தலைவராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர் சின்னையா பெரியசாமி ரொசான் இராஜசேகர்  தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மத்திய மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எம்.கே.சி.கே.அதபத்து தலைமையில்  புதன்கிழமை (18) அன்று நடைபெற்ற தலவாக்கலை லிந்துலை நகர சபையின் அமர்வில் பகிரங்க வாக்கெடுப்பின் மூலம் தலைவர், உப தலைவர் தெரிவு இடம்பெற்றது.

சபை அமர்வில் 12 உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்த நிலையில் . பொதுஜன பெரமுன உறுப்பினர் ஒருவர் வாக்களிக்காமல் நடுநிலை வகித்தார். ஏனைய 11 பேரில் 6  வாக்குகள் மூலம் இதன்படி, வாக்குகளின் மூலம் தலைவர், உப-தலைவர் தெரிவு செய்யப்பட்டனர்.

பி.கேதீஸ்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .