Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
R.Maheshwary / 2022 செப்டெம்பர் 12 , பி.ப. 03:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீலமேகம் பிரசாந்த்
தீபாவளி பண்டிகையை மிக நெருக்கடியான சூழ்நிலையில் கொண்டாடப்பட வேண்டிய சூழ்நிலைக்கு தோட்டத் தொழிலாளர்கள் உள்ளாகியுள்ளனர் என தெரிவித்துள்ள மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வே.இராதாகிருஸ்ணன், எனவே தோட்டத்தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணமாக இருபதாயிரம் ரூபாவை வழங்க தோட்ட கம்பனிகள் முன்வர வேண்டுமென தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,
நாட்டில் காணப்படுகின்ற பொருட்களின் அதியுச்ச விலையேற்றத்தால் பெருந்தோட்ட தொழிலாளர்கள் மிகப்பெரிய நெருக்கடியை சந்தித்து வருகின்றனர்.
நாட்டில் தற்போது விலைவாசி நாளுக்கு அதிகரித்த வண்ணமே உள்ளது.மிக வேகமாக அதிகரிக்கப்பட்ட பொருட்களின் விலை ஆமை வேகத்திலேயே குறைப்படுகின்றது.இந்நிலையில் தோட்ட தொழிலாளர்களின் வருமானத்தில் மிக சந்தோஷமாக தீபாவளி பண்டிகையை கொண்டாட முடியாத சூழ்நிலைக்கு தோட்ட தொழிலாளர்கள் உள்ளாகியுள்ளனர்.
எனவே, பெருந்தோட்ட கம்பனிகள் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டில் காணப்படுகின்ற பொருட்களின் விலையேற்றத்தை கருத்திற் கொண்டு, தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு ரூபாய் இருபதாயிரத்தை வழங்க முன்வர வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
18 May 2025