2026 ஜனவரி 20, செவ்வாய்க்கிழமை

தீயில் கருகிய ஐவரின் உடல்களும் இரவில் நல்லடக்கம்

Ilango Bharathy   / 2021 ஒக்டோபர் 11 , மு.ப. 08:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

பி.கேதீஸ்

இராகலை முதலாம் பிரிவு தோட்டத்தில்,இந்த மாதம் 7ஆம் திகதி ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை, மகள் மற்றும் அவரது இரண்டு பிள்ளைகள் ஆகியோரின் இறுதி கிரியைகள் 9ஆம் திகதி இரவு இடம்பெற்றன.

இராகலை முதலாம் பிரிவு தோட்ட மைதானத்தில் சடலங்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட
பின்னர், அத்தோட்ட பொது மயானத்தில் ஐவரின் உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டன.
இறந்தவர்களின் மரண பரிசோதனை  நுவரெலியா மாவட்ட பொது மருத்துவமனையில்
நடத்தப்பட்டது.

இதன்போது நுவரெலியா சட்ட வைத்திய அதிகாரியால் திறந்த அறிக்கை வெளியிடப்பட்டதோடு, உடற் கூறு மாதிரிகளை இரசாயன பகுப்பாய்வுக்காக அனுப்பப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் உடுகமசூரியவின் அறிவுறுத்தலுக்கமைய, இராகலை பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜெயசிங்கவின் வழிகாட்டுதலுக்கமைவாக இராகலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  டி.எம்.ஜெ.சமரகோன் உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X