2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

​தொழிலாளியின் முகத்தை விராண்டிய சிறுத்தை

Editorial   / 2023 மே 24 , பி.ப. 12:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 கௌசல்யா, எஸ்.சதீஸ், ரஞ்சித் ராஜபக்ஷ

சிறுத்தை தாக்குதலில் படுகாயமுற்ற தோட்டத் தொழிலாளி பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேலதிக சிகிச்சைகளுக்காக டிக்கோயா- கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் என பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையின் மாவட்ட வைத்தியர் எஸ்.ஏ.கே.ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

பிரிட்வெல் தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த போதே புதன்கிழமை (24) தோட்டத் தொழிலாளி சிறுத்தை தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். அவருடைய முகத்தில் கடுங்காயம் ஏற்பட்டுள்ளது. கையையும் கடித்து காயப்படுத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளது.

அந்தச் சிறுத்தை காட்டுக்கு விரட்டியடிக்குமாறு நல்லத்தண்ணி வனசீவராசிகள் அலுவல உத்தியோகத்தர்களுக்கு தெரிவித்துள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .