2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

நான்கு மாதங்களின் பின்னர் மெராயாவுக்கு சமையல் எரிவாயு

R.Maheshwary   / 2022 ஜூலை 24 , பி.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

லிந்துலை - மெராயா நகருக்கு 4 மாதங்களின் பின்னர்,இன்று  (24)  காலை லிட்ரோ சமையல் எரிவாயு விநியோகிக்கப்பட்டது.

குறித்த 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு 5100  ரூபாய்க்கு விற்பணை செய்யப்பட்டதாக நுகர்வோர் தெரிவித்தனர்.

வரிசைகளில்  500க்கு அதிகமானவர்கள் காத்திருந்த போதும், மெராயா நகரிலுள்ள  விற்பனை முகவர் நிலையத்துக்கு 350 சிலிண்டர்களே நிறுவனத்தால் அனுப்பி வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்றைய தினம் சமையல் எரிவாயுவைப் பெற்றுக்கொள்ள முடியாதவர்களுக்கு அடுத்து வரும் வாரங்களில் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்ததையடுத்து  வரிசைகளில்  நின்றவர்கள் கலைந்து சென்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .