2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

நிர்வாணமாக பாலியல் உறவு ; ஜோடிக்கு சிறை தண்டனை

Editorial   / 2021 ஒக்டோபர் 02 , மு.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

பலாங்கொடை பஹந்துடாவா எல்ல நீர்வீழ்ச்சியில் நிர்வாணமாக  பாலியல் செயற்பாடுகளில்  ஈடுபட்டு , அவற்றை ஒளிப்பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டவெளியிட்டனர்  ஜோடிக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது .

பலாங்கொடை நீதவான் நீதிமன்றத்தில்  அவ்விருவரும் ஆஜராகியிருந்தனர். இதன் போதே, தலா 10 ஆயிரத்து 800 ரூபாவும் நான்கு வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட மூன்அறு மாதங்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது 

மஹ​ரகமையைச் சேர்ந்த 34 வயதான ஆணும், எல்பிட்டியைச் சேர்ந்த 25 வயதான பெண்ணொருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டு, பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர் 

வெளிநாட்டு, உள்நாட்டு உல்லாச பயணிகள்   குடும்பங்களுடன் சென்று நீராடும் அந்த நீர்வீழ்ச்சிக்கு கீ​ழிருக்கும் நீர் நிலையில் வைத்தே, நிர்வாணமாக பாலியலில் ஈடுபடும் காட்சிகள் ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளன.   

அவ்விருவரும் செப்டம்பர் மாதம் 3ஆம் திகதி கைது செய்யப்பட்டார். அத்துடன் தங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில்  ஏற்றுக் கொண்டுள்ளனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .