2025 ஜூன் 23, திங்கட்கிழமை

நீரில் அடித்துச் செல்லப்பட்ட மாணவிகள்

Editorial   / 2019 ஜூலை 18 , பி.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

6. ரஞ்சித் ராஜபக்ஸ

அக்கரபத்தனை பிரதேசத்தில் இன்று (18)  பெய்த கடும் மழைக்காரணமாக, பாடசாலை மாணவிகள் இருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு, காணாமல் போயுள்ளனர்.

டொரின்டன் தோட்டத்திலிருந்து கொத்மலைஓயாவுக்கு நீரைக் காவிச் செல்லும் கால்வாய் ஒன்றுக்கு  அருகிலுள்ள தமது வீட்டுக்குச் செல்ல முயன்ற போது, மாணவனொருவரும் மாணவிகள் இருவரும் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.

இதன்போது, மாணவன் உயிர் தப்பியுள்ளதுடன், மாணவிகள் இருவர் காணாமல் போயுள்ளதாக அக்கரபத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

காணாமல்​ போயுள்ள இரு மாணவிகளும் 12 வயதுடையவர்களெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .