R.Maheshwary / 2022 ஓகஸ்ட் 14 , பி.ப. 02:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
சேஹ்ன் செனவிரத்ன
உடுதும்பர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீமுரே- புஸ்ஸ நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற 8 வயது சிறுமியும் அவரது பாட்டியும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த சிறுமி தனது தந்தையுடன் பாட்டியைப் பார்ப்பதற்காக கெமுனுபுர பிரதேசத்திலிருந்து 12ஆம் திகதி மீமுரே பிரதேசத்துக்கு சென்றுள்ளார்.
அன்று மாலை பாட்டியுடன் சேர்ந்து நீர்வீழ்ச்சியைப் பார்க்கச் சென்று நீராடிக்கொண்டிருந்த போது, நீரில் மூழ்கியுள்ளார்.
இதனையடுத்து சிறுமியைக் காப்பாற்ற பாட்டி முயன்ற போது 59 வயதான பாட்டியும் உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணைகளை உடுதும்பர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
2 minute ago
8 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
8 minute ago
1 hours ago
1 hours ago