2025 ஜூலை 23, புதன்கிழமை

நுவரெலியா செல்லும் வாகன சாரதிகளின் கவனத்துக்கு

Editorial   / 2017 ஓகஸ்ட் 05 , பி.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராச்சந்திரன், ஆ.ரமேஸ்

நுவரெலியா பிரதேசத்தில் பெய்து வரும் கடும் காற்றுடன் கூடிய மழையால் அப்பிரதேசத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஹட்டன் - கொழும்பு மற்றும் ஹட்டன் - நுவரெலியா பிரதான மார்க்கங்களில் அதிக பனிமூட்டம் காணப்படுவதால், சாரதிகள் வாகனங்களின் முன் விளக்குகளை ஒளிரவிட்டு, வாகனங்களைச் செலுத்துமாறு, பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும், பிரதான வீதிகளில் வழுக்கல் தன்மையும் ஏற்பட்டுள்ளது.

இப்பிரதான வீதிகளில் பயணிக்கும் வாகன சாரதிகள் அவதானத்துடன் செயற்பட்டு, விபத்துகளைத் தவிர்த்துக்கொள்ளும்படி, நுவரெலியா பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .