2025 ஜூன் 21, சனிக்கிழமை

ப​ழமையான கற்சுரங்கப் பாதையில் வெடிப்பு

Editorial   / 2018 ஏப்ரல் 24 , பி.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பிரபலமானதும் வலராற்றுச் சிறப்புமிக்கதுமான கடுகண்ணாவை கற்சுரங்கத்தில், திடீரென வெடிப்பு ஒன்று ஏற்பட்டுள்ளதெனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் குறித்த பகுதியில், போக்குவரத்துத் தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதோடு, குறித்த வெடிப்பைச் சீர்படுத்தும் வரை, தற்காலிக அணை கொடுத்து, பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதெனவும் குறிப்பிடப்படுகிறது.

அத்துடன், குறித்த கருங்கல்லில் ஏற்பட்டுள்ள வெடிப்புக்கு அப்பால், சுர்ஙகத்தின் அடிப்பகுதியிலும் வெடிப்பு ஏற்பட்டுள்ளதையடுத்து, வீதி அபிவிருத்தி அதிகாரசபை, தேசிய கட்டட ஆய்வு நிலையம், தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் ஆகியோர் குறித்த இடத்துக்கு விரைந்துள்ளனர்.

கொழும்பு- கண்டி A1 வீதியில் அமைந்துள்ள இக்கற் சுரங்கமானது, 1828- 1830 காலப்பகுதியில் அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .