Janu / 2026 பெப்ரவரி 04 , பி.ப. 01:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
பதுளை நகரில் உள்ள பிரபல உணவக கட்டடமொன்றில் புதன்கிழமை (04) காலை திடீரென ஏற்பட்ட தீ பரவலில் குறித்த கட்டடம் தீக்கிரையாகியுள்ளது.
பதுளை மாநகர தீயணைப்பு படையினரின் கடும் முயற்சியால் தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட போதிலும் உணவகத்திலிருந்த உணவு பண்டங்கள், ஏனைய உணவக அத்தியாவசிய பொருட்கள் என்பன தீக்கிரையாகியுள்ளன.
இதன்போது உணவகத்தில் இருந்து வெளியேற முடியாமல் புகை மண்டலத்தால் மூச்சு திணறலுக்கு மற்றும் காயங்களுக்குள்ளாகிய இரண்டு பேர் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
குறித்த தீப்பரவல் தொடர்பாக பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நடராஜா மலர்வேந்தன்

05 Feb 2026
05 Feb 2026
05 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
05 Feb 2026
05 Feb 2026
05 Feb 2026