2026 மே 01, வெள்ளிக்கிழமை

பல்கலைக்கழகத்துக்குள் நடமாடிய போலி வைத்தியர் கைது

Sudharshini   / 2015 ஓகஸ்ட் 31 , மு.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

பேராதனை பல்கலைக்கழகத்துக்குள் நடமாடிய போலி வைத்தியர் ஒருவரை பேராதனை பொலிஸார் சனிக்கிழமை  (29) கைது செய்துள்ளனர.

மேற்படி போலி வைத்தியர் குறித்து கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, பல்கலைக்கழக வளாகத்துக்குள் சென்ற பொலிஸார், அவரிடம் விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் அவரை கைது செய்துள்ளனர்.

கண்டி, அருப்பளை பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதான மேற்படி சந்தேகநபரிடமிருந்து,  போலி பல்கலைகழக அடையாள அட்டையொன்றையும்   பொலிஸார் மீட்டுள்ளனர்.

மேற்படி  சந்தேகநபர் குறித்த மேலதிக விசாரணைகளை பேராதனை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .