Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Editorial / 2023 டிசெம்பர் 06 , பி.ப. 05:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரதேச வைத்தியசாலையின் நிர்மாணப் பணியில் ஈடுபட்டிருந்த ஒருவர் மீது பழைய மதிலொன்று சரிந்து விழுந்ததில் அவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம், கடுகன்னாவ, ஹெனாவல எனுமிடத்தில் இடம்பெற்றுள்ளதென பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தவர் பரண பட்டிய பகுதியைச் சேர்ந்த, 30 வயதான ரஞ்சித் அபேரத்ன என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர், ஒரு பிள்ளையின் தந்தை ஆவார்.
இறந்தவர் மற்ற தொழிலாளர்களுடன் சேர்ந்து மருத்துவமனையின் ஆபத்தான பழைய மதிலை அகற்றுவதற்காக அருகில் புதிய மதிலை கட்டுவதற்காக மண்ணை வெட்டிக் கொண்டிருந்தபோது பழைய மதில் அவர் மீது இடிந்து விழுந்தது.
பழைய மதிலுடன் இடிந்து விழுந்த மண்ணுக்கு அடியில் புதையுண்ட நபரை மற்ற தொழிலாளர்கள் காப்பாற்ற முயன்றனர். ஆனால் அது தோல்வியடைந்தது.
மண் மற்றும் கற்களுக்கு அடியில் இருந்த நபரை வெளியே எடுக்க சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் எடுத்ததாகவும், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது அவர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
46 minute ago
55 minute ago