2024 மே 03, வெள்ளிக்கிழமை

பஸ் - ஓட்டோ விபத்தில் மூவர் காயம்

Janu   / 2024 பெப்ரவரி 18 , பி.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

கேகாலை -  புலத்கொஹுபிட்டிய வீதி,  உதுகொட பிராந்திய வைத்தியசாலைக்கு அருகில் ஞாயிற்றுக்கிழமை  (18) காலை இடம்பெற்ற விபத்தில்  மூவர் காயமடைந்து  வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது .

புலத்கொஹுபிட்டிய நோக்கி  பயணித்துக்கொண்டிருந்த இ . போ . சபைக்கு  சொந்தமான பேருந்தொன்று  எதிரே வந்த  முச்சக்கரவண்டியுடன் மோதியே இவ் விபத்து ஏற்பட்டுள்ளதாக புலத்கொஹுபிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும்  இவ் விபத்தின்  போது  முச்சக்கரவண்டியில் பயணித்த ,  யடிதாரிய  பிரதேசத்தை  சேர்ந்த  மூன்று இளைஞர்கள்  படுகாயமடைந்து கேகாலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை புலத்கொஹுபிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .