2025 ஜூலை 07, திங்கட்கிழமை

பஸ் விபத்தில் அறுவர் காயம்

Editorial   / 2017 நவம்பர் 01 , பி.ப. 02:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

பண்டாரவளையிலிருந்து மொரட்டுவைக்கு பயணிக்கவிருந்த  சொகுசு பஸ், ஹல்துமுல்ல களுபஹன சந்தியில் வைத்து, பாதையை விட்டு விலகி கடையொன்றில் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த அறுவர், ஹல்துமுல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரென, பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்து இன்று பகல் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் சாரதி மற்றும் நடத்துநரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவ்விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .