2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

பஸ் விபத்தில் மாணவர்கள் உள்ளிட்ட 10 பேர் காயம்

R.Maheshwary   / 2022 நவம்பர் 02 , மு.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஸ

அதிக வேகத்துடன் பயணித்த இரண்டு தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 10 பேர் காயமடைந்து நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை 7.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன் ஹட்டனிலிருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸொன்றும் கண்டியிலிருந்து ஹட்டன் நோக்கி பயணித்த பஸ்ஸொன்றும் நாவலப்பிட்டி- மிபிட்டிய பகுதியில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது என நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்களுள் பஸ்ஸின் சாரதிகளும் உள்ளடங்குவதாகத் தெரிவித்த பொலிஸார், குறித்த வீதியில் அடிக்கடி விபத்து இடம்பெறும் பகுதியிலேயே இந்த விபத்தும் இடம்பெற்றுள்ளதாகவும் அதிக வேகமே விபத்துக்கான காரணம் என்றும்  ​தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .