2024 மே 03, வெள்ளிக்கிழமை

பாடசாலை மாணவி துஷ்பிரயோகம் ; இருவர் கைது

Janu   / 2024 பெப்ரவரி 12 , பி.ப. 12:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

திம்புல-பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  மேபீல்ட் தோட்டத்தை  சேர்ந்த 13 வயதுடைய  மாணவியொருவரை  பாலியல் துஷ்பிரயோகம்  செய்த  குற்றச்சாட்டில்  அதே  தோட்டத்தை  சேர்ந்த 60 மற்றும்  40 வயதுடைய  இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

துஷ்பிரயோகத்துக்குள்ளான மாணவி பத்தனை பொலிஸாரால்  , சட்ட வைத்திய அதிகார பரிசோதனைக்காக  கிளங்கன் ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .

பொலிஸாரால்  மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட  விசாரணையின் போது பல தடவை  குறித்த 60 வயது நபரால்  மாணவி துஷ்பிரயோகத்திற்கு  உள்ளாகியமை மற்றும் அதற்கு  40 வயதுடைய நபர் உதவி செய்துள்ளமை தெரியவந்துள்ளது .

இந் நிலையில்  சந்தேக நபர்களை  ஞாயிற்றுக்கிழமை (11)  ஹட்டன் நீதிமன்ற பதில்நீதவான் முன்னிலையில்  ஆஜர் படுத்திய  போது  எதிர்வரும் 19 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டதாக  பொலிஸார்  தெரிவித்துள்ளனர் .

மேலும் கைது  செய்யப்பட்ட இருவரையும்  அவர்களது குடும்பத்தினரையும் தோட்டத்திலிருந்து வெளியேற்றுமாறு குறித்த தோட்ட தொழிலாளர்கள்  போராட்டமொன்றை  மேற்கொண்டு வருகின்றமை  குறிப்பிடத்தக்கது.

ரஞ்சித் ராஜபக்ஷ  , செ.தி.பெருமாள் 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .