Niroshini / 2021 மே 09 , பி.ப. 04:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
-டி.ஷங்கீதன்
'பாதுகாப்பான குடிநீர் பாதுகாப்பான வாழ்க்கை' எனும் வேலைத்திட்டத்தின் கீழ், டிக்கோயா ரோட்டறி கழகத்தால் ஐந்து பாடசாலைகளுக்கு குடிநீர் சுத்திகரிக்கும் இயந்திரங்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன.
ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரி, ஹட்டன் சென் ஜோன் பொஸ்கோ கல்லூரி, புளியாவத்தை தமிழ் வித்தியாலயம், செனன் தமிழ் வித்தியாலயம், அக்கரப்பத்தனை கிளாசோ தமிழ் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளுக்கே, சுமார் ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான இயந்திரங்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன.
இயந்திரங்களைக் கையளிக்கும் நிகழ்வில், டிக்கோயா ரொட்டறி கழகத்தின் உறுப்பினர்களான டொக்டர் சந்திரராஜன், டொக்டர் ரவிவர்மன் சோமசுந்தரம், சுப்பிரமணியம் தியாகு, துரைசாமி பிள்ளை, இராஜேந்திரன் நலன் விரும்பிகளான சாந்தகுமார், வூட்டன் கோவில் அரங்காவலர் சபை தலைவர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
5 minute ago
25 minute ago
44 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
25 minute ago
44 minute ago
1 hours ago