2025 மே 20, செவ்வாய்க்கிழமை

பாம்பு தீண்டி குழந்தை மரணம்

R.Maheshwary   / 2022 ஜூன் 20 , பி.ப. 12:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமணசிறி குணதிலக

விரியன் பாம்பு தீண்டியதில் மூன்றரை வயது குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.

மொனராகலை- கொலன்சின்ன பிரதேசத்தைச் சேர்ந்த ஆண் குழந்தையொன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக மொனராகலை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த குழந்தை மேலும் சில குழந்தைகளுடன் வீட்டு முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த போதே, விரியன் பாம்பு குழந்தையின் காலை தீண்டியுள்ளதாக தெரிவித்தனர்.

இதனையடுத்து குழந்தை மொனராகலை வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X