2026 மே 13, புதன்கிழமை

dd

பிணக்குகள் பதிவேடு மீட்டும் ஆரம்பம்

ஆ.ரமேஸ்   / 2019 செப்டெம்பர் 09 , பி.ப. 12:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

தோட்டத் தொழிலாளர்களின் தொழில் பிணக்குகளுக்கு, தோட்ட நிர்வாகம் எழுத்துமூலம் தீர்வு வழங்க, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தொழிற்ற்சங்கப் பிணக்குத் தீர்வு பதிவேட்டுப் புத்தமாக மினிட் புத்தகங்களை, தோட்டக் கமிட்டிகளுக்குக் கையளிக்கும் நிகழ்வு, நேற்று (08), நடைபெற்றது.

அக்கரப்பத்தனை, தலவாக்கலை, நானுஓயா ஆகிய பிரதேசங்களில் இந்த மிணிட் புத்தகம் வழங்கும் நடவடிக்கையை, காங்கிரஸின் உபதலைவரும் மத்திய மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான ஏ.பி.சக்திவேல் முன்னெடுத்திருந்தார்.

இதன் ஒரு நிகழ்வாக, நுவரெலியா பிரதேச சபைத் தவிசாளர் வேலு யோகராஜ் தலைமையில், நானுஓயா பிரதேசத்திலுள்ள சபைக் காரியாலயத்தில், இந்தப் புத்தகங்கள் கையளிக்கப்பட்டிருந்தது.

இந்த பிணக்குகள் பதிவேட்டு நடைமுறை, கடந்த சில வருடங்களாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையிலேயே, தற்போ மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .