2026 மே 10, ஞாயிற்றுக்கிழமை

பிரபல புகைப்படக் கலைஞர் சின்னையா கார்த்திகேசு காலமானார்

Editorial   / 2019 டிசெம்பர் 24 , பி.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

பசறையின் பிரபல புகைப்படக் கலைஞரான சின்னையா கார்த்திகேசு, இன்று (24) அதிகாலை காலமானார்.

அதிகாலையில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பையடுத்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி காலமானார்.

1948ஆம் ஆண்டு டிசெம்பர் 14ஆம் திகதி பிறந்த இவர், கலைத்துறையில் நாடகக் கலைஞராக பிரபலமடைந்தவர் ஆவார்.

பிந்தையாக காலங்களில், புகைப்படக் கலைஞராகவும் தன்னை வளர்த்துக்கொண்டு, 35 வருடங்களுக்கு மேலாக, புகைப்படக் கலைஞனாக இருந்து வந்தார்.

இந்நிலையில், இவரது இறுதிக்கிரியைகள், பதுளை போஹுடுமுல்லயிலுள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, பதுளை பொதுமயானத்தில், நாளை (25), பிற்பகல் 2 மணிக்கு, தகனம் செய்யப்படவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .