Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Maheshwary / 2022 செப்டெம்பர் 08 , மு.ப. 10:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலக உணவுத் திட்டத்தின் கீழ், அனைத்து தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் நகர்ப்புற பெருந்தோட்ட சமூகத்தினருக்கும் ஒக்டோபர் மாதம் முதல் விசேட கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடியை மையப்படுத்தி ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைவாக தோட்ட தொழிலாளர்கள் மற்றும் நகர்புறங்களை அண்மித்த தோட்ட மக்களுக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்டம் மற்றும் வீட்டுப் பணியாளர்கள் தொடர்பான அமைச்சர்கள் குழு நேற்று முதல் முறையாக பாராளுமன்றத்தில் கூடியபோதே, இது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
தற்போதைய நெருக்கடிக்கு மத்தியில் ஜப்பான், கொரியா மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகளுக்கு தொழிலாளர்களை அனுப்புவதை ஒழுங்குபடுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
3 hours ago
9 hours ago
17 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
9 hours ago
17 Aug 2025