2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பொலிஸ் அதிகாரியின் சடலம் நீர்த்தாங்கியில் இருந்து மீட்பு

Editorial   / 2021 ஒக்டோபர் 29 , பி.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவி

ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் காணாமல் போன பொலிஸ் அதிகாரியான எஸ். இளங்கோவன், கம்பளை ஆதார வைத்தியசாலைக்கு நீர்வழங்கும் சுமார் 40 அடி உயரமான நீர்த்தாங்கியில் இருந்து சடலமாக நேற்று (29) மீட்கப்பட்டார்.

பூண்டுலோயாவை வசிப்பிடமாகக் கொண்ட இவர், கொத்மலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றினார். இந்நிலையில், நெஞ்சுவலி காரணமாக செப்டெம்பர் மாதம் 8ஆம் திகதியன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், மறுநாள் காணாமற் போயுள்ளார். அன்றிலிருந்து  இன்று (29) வரையிலும் அவரது மனைவி உட்பட உறவினர்கள் தேடிக்​கொண்டே இருந்துள்ளனர்.

இந்நிலையில், கம்பளை ஆதார வைத்தியசாலையின் வாட்டுகளுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரில் ஒருவகையான மனம் வீசுவதாக நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. அதனையடுத்து, மேற்​கொள்ளப்பட்ட தேடுதலின் போது, நீர்த்தாங்கியில் சடலமொன்று மிதப்பது கண்டறியப்பட்டது.

நீதிவானின் விசாரணையின் பின்னர் சடலம் மீட்கப்பட்டது. அந்த சடலம், காணாமல் போன பொலிஸ் அதிகாரி எஸ். இளகோவன் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .