2024 மார்ச் 28, வியாழக்கிழமை

பொங்கல் தினத்திலும் வெடித்தது அடுப்பு

Freelancer   / 2022 ஜனவரி 15 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவத்தூர நவஜனப்பதய பிரதேசத்தில், ஒரு வீட்டில் சமையல் எரிவாயு அடுப்பு திடீரென வெடித்து சிதறியுள்ளது.

பொங்கல் தினமான நேற்று, காலை உணவை சமைத்துக் கொண்டு இருந்த போது திடீரென அடுப்பு வெடித்து சிதறியுள்ளது.

சம்பவத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

கம்பளை மாவத்தூர நகரில் இருக்கும் எரிவாயு சிலிண்டர் வியாபார நிலையத்திற்கு புதிதாக 60 சிலிண்டர்கள் இறக்குமதி செய்யப்பட்டிருந்தன. 

நேற்று முன்தினம் அந்த கடையில் வாங்கிய புதிய சிலிண்டராலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை கம்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X