2025 ஜூன் 21, சனிக்கிழமை

பொதுஜன பெரமுன வசமானது கடுகண்ணாவை

செ.தி.பெருமாள்   / 2018 ஏப்ரல் 12 , பி.ப. 02:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்து ஐக்கிய தேசியக் கட்சியின் வசமிருந்த கடுகண்ணாவை நகர சபையின் ஆட்சியதிகாரம், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் கீழ் செயற்படும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வசமாகியுள்ளது.

15 உறுப்பினர்களைக் கொண்ட இச்சபையில், பொதுஜன பெரமுனவுக்கு 7 உறுப்பினர்களும், ஐ.தே.கவுக்கு 6 உறுப்பினர்களும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கும் மக்கள் விடுதலை முன்னணிக்கும் தலா ஓர் உறுப்பினரும் காணப்பட்டனர்.

சபையின் தவிசாளரைத் தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பு, நேற்று (12) இடம்பெற்ற போது, பொதுஜன பெரமுனவின் அமில வேரகொட வெற்றிபெற்றுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .