2025 மே 19, திங்கட்கிழமை

போதைப் பொருள்களுடன் எழுவர் ஹட்டனில் கைது

R.Maheshwary   / 2022 செப்டெம்பர் 04 , பி.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்‌ஷ

ஹெரோய்ன், கஞ்சா ஆகிய போதைப் பொருள்களை தம்வசம் வைத்திருந்த 7 பேர் ஹட்டன் கலால் அலுவலக அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது 310 மில்லிகிராம் ஹெரோய்னை வைத்திருந்த சந்தேகநபர் ஹட்டன்- பண்டாரநாயக்கபுர பகுதியைச் சேர்ந்த 28 வயதானவர் என கலால் அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏனைய 6 சந்தேகநபர்களிடம் இருந்தும் கஞ்சா கைப்பற்றப்பட்டதாகவும் குறித்த அறுவரும் போதைப் பொருளுக்க அடிமையான 25- 30 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட அறுவரும் குடாகம, பண்டாரநாயக்கபுர ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்ட 7 பேரும் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X