2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

போதைப் பொருள்களுடன் நுவரெலியாவுக்குச் சென்ற ஐவர் கைது

R.Maheshwary   / 2022 டிசெம்பர் 05 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்‌ஷ

போதைப் பொருள்களுடன் நுவரெலியாவுக்கு சுற்றுலாச் சென்ற நான்கு இளைஞர்களும் சட்டவிரோதமாக வல்லப்பட்டையைக் கொண்டுச் சென்ற மற்றுமொரு நபரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (4) மாலை ஹட்டன்- கொழும்பு பிரதான வீதியின் கினிகத்தேனை- களுகல பொலிஸ் காவலரண் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போதே,சந்தேகநபர்கள் ஐவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என பொல்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.ஜி.ரஞ்சன் அபேசிங்க தெரிவித்துள்ளார்.

கைதுசெய்யப்பட்ட 4 சந்தேகநபர்களிடமிருந்து கேளா கஞ்சா, போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், இவர்கள் மேலும் சிலருடன் தனியார் பஸ்ஸொன்றில் நுவரெலியாவுக்குச்  சுற்றுலா சென்றவர்கள் என தெரியவந்துள்ளது.

அத்துடன் சந்தேகநபர்கள் நால்வரும் 20- 30 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்பதுடன், இவர்கள் அவிசாவளை மற்றும் கிரிந்திவெல ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை கினிகத்தேனை பகுதியிலிருந்து தெரணியகல பகுதிக்கு அனுமதியின்றி 2 கிலோ 3 கிராம் வல்லப்பட்டையைக் கொண்டுச் சென்ற நபர் ஒருவரும் இதன்​போது கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர்கள் ஐவரையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக பொல்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .