2026 மே 09, சனிக்கிழமை

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 12 சந்தேகநபர்கள் கைது

Editorial   / 2020 பெப்ரவரி 20 , மு.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

எஸ்.சதீஸ்

சட்டவிரோமான முறையில், போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுவந்த
சந்தேகநபர்கள் 12 பேரை, நாவலப்பிட்டி பொலிஸார், இன்று (20) கைது செய்துள்ளனர்.

நாவலப்பிட்டி பகுதியில் மாத்திம், 500க்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் போதைப்பொருளை பயன்படுத்தி வருவதாகவும் இதில் இரண்டு மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பிலும், விசேட நடவடிக்கை முன்னெடுக்குமாறு, இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்திருந்தார்.

இதன்பின்னர் முன்னெடுக்கப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போதே, இந்த 12 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சுற்றிவளைப்பில் 150 பொலிஸார் ஈடுபட்டிருந்ததுடன், எட்டு மோப்பநாய்களும் உதவிக்காக எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .