2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

முச்சக்கர வண்டி விபத்தில் இருவர் படுகாயம்

Kogilavani   / 2017 மார்ச் 26 , மு.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன் 

15  வயது சிறுவன் செலுத்திச் சென்ற முச்சக்கர வண்டியொன்று, 100 அடிப் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த மூவர், மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குடா மஸ்கெலியாவிலிருந்து மஸ்கெலியா நகருக்குப் பயணித்த முச்சக்கர வண்டியானது,  ஹட்டன் – மஸ்கெலியா பிரதான வீதி, குடா மஸ்கெலியா பகுதியில் வைத்து,  100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இச்சம்பவம் நேற்று  இரவு இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில், 15 மற்றும் 14 வயதுடைய சிறுவர்களே காயமடைந்துள்ளனர். முச்சக்கரவண்டியின் தடுப்புக் கட்டை செயலிழந்ததன் காரணமாகவே, இவ்விபத்து சம்பவித்துள்ளதாகவும், இது தொடர்பிலான  மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X