2026 மே 01, வெள்ளிக்கிழமை

மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபருக்கு வலைவீச்சு

Sudharshini   / 2015 செப்டெம்பர் 01 , பி.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஞ்சித் ராஜபக்ஷ, எஸ்.சதீஸ்

பாடசாலை மாணவியை வானுக்குள் வைத்து பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படும் நான்கு பிள்ளைகளின் தந்தையை தேடி வலைவிரித்துள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.

பொகவந்தலாவையில் அமைந்துள்ள பாடசலையொன்றில், கல்விக் கற்றுவரும் 11 வயது மாணவியை மேற்படி நபர், பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கியதாக மாணவியின் பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

பொகவந்தலாவையிலிருந்து குயினா தோட்டம் வரை பயணிகளை ஏற்றிச்செல்லும் வானில் வைத்தே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மாணவி, வைத்திய பரிசோதனைக்காக பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .