2026 ஏப்ரல் 09, வியாழக்கிழமை

மே தினத்தில் மக்கள் அவதி

Kogilavani   / 2016 மே 02 , மு.ப. 03:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

கு.புஸ்பராஜ்

தொழிலாளர்கள் தினமான நேற்று ஞாயிற்றுக்கிழமை (01) தலவாக்கலை மற்றும் நுவரெலியாவில் பல கூட்டங்கள் இடம்பெற்றன.
குறித்தக் கூட்டங்களுக்கு கட்சி ஆதரவாளர்களை ஒன்று சேர்க்கும் வகையில், தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்துக்குச் சொந்தமான அனைத்து பஸ்களும் வாடகைக்கு பெறப்பட்டிருந்தன.

இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு மத்தியில் தத்தமது அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அக்கரப்பத்தனை, டயகம, நுவரெலியா, தலவாக்கலை, இராகலை, பொகவந்தலாவ, மஸ்கெலியா போன்ற பகுதிகளுக்கு நேரத்துக்கு பஸ் சேவை இடம்பெறாத காரணத்தினால், பிரதான பாதைகளில் அதிகமான பயணிகள் பஸ்களுக்காக காத்திருந்து தங்களுடைய தேவைகளை செய்துகொள்ள முடியாத நிலையில் இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .